இறையவனின் திருமகனாய், மண்ணுலகில் தாம் உதித்து, மாந்தர்தம் துயர் களைய, தன்னுயிரை ஏசுபிரான் நீத்த நாளாம் புனித வெள்ளி! இன்று.
அவர் வழியில் இறைவனைத்தேடும் அனைவரும், அவரருளால் வாழ்க நிறைந்து! 15-04-2022

GOOD FRIDAY

 

புனித வெள்ளி! - 2020                                                       

முந்தைய பகுதிக்குச் செல்ல...! Click Here
முகப்புக்குச் செல்ல..!
 
Click Here

மண்ணிலே பல மாமனிதர் பிறப்பதுண்டு!

திண்ணியமாய் மாந்தருக்கு வாழ்வியலைச் சொல்வதுண்டு!

கண்ணியமாய் அவர்வழியில் செல்வார்தம் மதமென்று,

எண்ணியே வாழ்வில் தனிப்பெருமை கொண்டு வாழ்வார்.

புண்ணியச்சீர் பெருமகனாம் ஏசுபிரான் மக்களுக்காய் உயிர் நீத்தார்!

மண்ணுலகில் மாந்தர்தாம் பெருவாழ்வு கொள்வார் என்றே!

அவர் வழியில் இறை தேடுவோர் அருள் பெறுவாராக!

- கவிவளவன் 10-04-2020

புனித வெள்ளி  - 2021

கனிவோடு காலமும் காலையும் பிறக்கட்டும்!

இறைவன் திருமகனாய் இம்மண்ணில் வந்துதித்து, மக்கள் துயர் களைய, தன்னுயிரை ஈந்த நாளாம் இன்று! அவர் வழியில் இறையைத் தேடும் அனைவரும் தன்னிலை உணர்ந்து நன்னிலை அடைய வல்லவன் இறையை வேண்டுகிறேன்! Good Friday 07-04-2023

இனியேது துன்பமென்று இதயந்தான் மலரட்டும்!

நனிசீர் நாளென்று நவிலுவார் மக்களுந்தான்!

கனியவராய் இறையவனார் மகனார் தானும்

தனியராய் நிறைந்தே இன்னுயிர் நீத்த நாளாம்!

புனித வெள்ளி! 29-03-2024
மண்ணுயிர்க்காய்த் தன்னுயிரைப்
புண்ணியனார் இயேசுபிரான்,
ஈந்த நன்னாள் இன்று!
அவர் வழியில்,
இறைமை தனைத்தேடும்,
யாவருக்கும், இறையவனும் அருள் புரிய வேண்டுவனே! 29-03-2024

கனிவுடனே அவர் சொன்ன அன்பின் வழியில்,

அனைவருக்கும் வாழ்த்து!

அன்புடன்,

கு.ப. அசோகன்  (02-04-2021)